சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிவு

சென்செக்ஸ் 40 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் பெரிதாக ஏற்ற இறக்கங்களின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 40 புள்ளிகள் (0.07 சதவீதம்) சரிந்து 57,613 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் (0.20 சதவீதம்) சரிவடைந்து 16,951 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கத்தை நோக்கிச் சென்றது. காலை 10:05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 34.03 புள்ளிகள் உயர்வடைந்து 57,687.89 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 01.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,984.55 ஆக இருந்தது.

பரந்த சந்தைகள் மற்றுமொரு விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானதால், பெஞ்ச் மார்க் குறியீடுகள் செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கங்களின்றி தட்டையாக நிறைவடைந்தன. தொடக்க வர்த்தகத்தில் நிதிப் பங்குகளின் உயர்வினால் சென்செக்ஸ் 57,949 வரை உயர்ந்தது. அதன் பின்னர் நிலையில்லாமல் சென்ற வர்த்தகத்தில் 57,495 வரை சரிந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 40.14 புள்ளிகள் சரிவடைந்து 57,613.72 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34.00 புள்ளிகள் சரிவடைந்து 16,951.70. ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் உயர்ந்திருந்தன. டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், மாருதி சுசூகி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in