Published : 28 Mar 2023 05:09 AM
Last Updated : 28 Mar 2023 05:09 AM

வீட்டுக்கடன் தவணை செலுத்துவதில் நெருக்கடி

புதுடெல்லி: ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில், வீட்டுக் கடனுக்கான மாதாந்திர தவணை (இஎம்ஐ) உச்சம் தொட்டுள்ளது.

2022 ஏப்ரல் மாதம் 6.5 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் பெற்றவர்கள் தற்போது 9 சதவீத வட்டி கட்டும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனால், வங்கியில் கடன் பெற்றவர்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

ரிசர்வ் வங்கி 2022-23-ல் மட்டும் 6 முறை ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தப்பட்டது. ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியானது ஏனைய வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x