Published : 23 Mar 2023 11:53 AM
Last Updated : 23 Mar 2023 11:53 AM

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 253 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,961 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,078 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கத் தொடங்கியது. முற்பகல் 11:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 56.67 புள்ளிகள் சரிவடைந்து 58,157.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.15 புள்ளிகள் சரிவடைந்து 17,140.75 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய பாதகமான சூழல், அமெரிக்க பெடரல் வங்கியின் மற்றொரு வட்டி விகி உயர்வு குறித்த அறிவிப்பு ஆகியனவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, என்டிபிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், பங்குகள் உயர்வில் இருந்தன.பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, இன்போசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோட்டக் மகேந்திரா பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட் பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x