

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 445 புள்ளிகள் (0.77 சதவீதம்) உயர்வடைந்து 58,074 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயர்வடைந்து 17,107 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடனேயேத் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 233.70 புள்ளிகள் உயர்வடைந்து 57,862.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31.55 புள்ளிகள் உயர்வடைந்து 17,019.95 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதமான சூழல், ஹெவி வெயிட் பங்குகளின் உயர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் இருந்து சற்று மீண்டு இன்று லாபத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 445.73 புள்ளிகள் உயர்வடைந்து 58,074.68 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.10 புள்ளிகள் உயர்வடைந்து 17107.50 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, ஐடிசி, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.