

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்வடைந்து 57,843 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 69 புள்ளிகள் உயர்வடைந்து 17,057 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடனேயேத் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 233.70 புள்ளிகள் உயர்வடைந்து 57,862.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31.55 புள்ளிகள் உயர்வடைந்து 17,019.95 ஆக இருந்தது.
வங்கி நெருக்கடிகள் குறையத்தொடங்கும் என்ற நம்பிக்கை காரணமாக உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.