கரோனா பரவல் காலத்தில் வறுமை அதிகரிக்கவில்லை - பனகரியாவின் ஆய்வறிக்கையில் தகவல்

கரோனா பரவல் காலத்தில் வறுமை அதிகரிக்கவில்லை - பனகரியாவின் ஆய்வறிக்கையில் தகவல்
Updated on
1 min read

நியூயார்க்: பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா எழுதிய ‘‘இந்தியாவில் வறுமையும், சமத்துவமின்மையும்: கரேனா வுக்கு முன்பும் பின்பும்’’ என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடுமையான ஊரடங்கு காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2020) கிராமப்புற வறுமை ஓரளவு உயர்ந்தது. அதன் பின்பு கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலை அளவுக்கு குறைந்தது.

அதேநேரம், ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில், நகர்ப்புற வறுமை அதிகரித்தது. நான்கு காலாண்டுகளாக நகர்ப்புற வறுமையின் அதிகரிப்பில் உள்ள தொடர்பு-தீவிர தொழில்களின் உற்பத்தியில் ஏற்பட்ட பெரிய சரிவுடன் ஒத்துப்போனது. கூடுதல் 5 கிலோ உணவு தானியங்கள் இலவச விநியோகம், நகர்ப்புற வறுமையின் கூர்மையான சரிவைக் கட்டுப்படுத்த உதவியது.

ஒட்டுமொத்தமாக, கரோனா காலத்தில் இந்தியாவில் வறுமை அதிகரித்து விட்டதாகவும் மற்றும் சமத்துவமின்மை நிலவியதாகவும் தெரிவிக்கப்படும் தகவல்கள் மிகவும் தவறானவை. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in