பங்குச்சந்தை | சென்செக்ஸ் 795 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 546 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,259 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 164 புள்ளிகள் சரிவடைந்து 17,589 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதிநாள் வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. காலை 09:32 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 795.37 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,010.91ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 193.00 புள்ளிகள் சரிவடைந்து 17,396.60 ஆக இருந்தது.

வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த கவலைகளால் உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சியில் இருந்தன. அதன் எதிரொலி காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in