

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 123 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்வடைந்து 60,348 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 17,754 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 09:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 161.97 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,062.49 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.00 புள்ளிகள் சரிந்து 17,666.45 ஆக இருந்தது.
நேற்றைய விடுமுறைக்கு பின் இன்று வீழ்ச்சியில் தொடங்கிய பங்குச்சந்தைகள் வர்த்தக நேரத்தின்போது ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. கடைசி நேரத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெவிவெயிட் பங்குகளின் உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 123.63 புள்ளிகள் உயர்வடைந்து 60,348.09 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 42.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,754.40 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஐடிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றம்பெற்றிருந்தன. நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ்,விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.