Published : 15 Sep 2017 09:52 AM
Last Updated : 15 Sep 2017 09:52 AM
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிலும் நாட்டின் ஜிடிபி 6 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கும் என்று எஸ்பிஐ ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: வேளாண்மைத் துறையின் வளர்ச்சி குறைவாக இருப்பது, உற்பத்தி மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பது போன்ற காரணங்களால் 2-வது காலாண்டிலும் ஜிடிபி குறைவாகவே இருக்கும். ஆனால் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் ஜிடிபி 6.5 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்.
உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற முக்கிய விவசாய உற்பத்தி மாநிலங்களில் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை உற்பத்திக் குறியீட்டில் வளர்ச்சி இல்லை. இதனால் 2-வது காலாண்டு ஜிடிபி 6 சதவீதத்துக்கு குறை வாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT