பங்குச்சந்தை | சென்செக்ஸ் 688 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 688 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 503 புள்ளிகள் உயர்ந்து 59,412 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி157 புள்ளிகள் உயர்வடைந்து 17,479 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதிநாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 688.16 புள்ளிகள் உயர்வடைந்து 59,597.51 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 171.95 புள்ளிகள் சரிவடைந்து 17,493.85 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் வலுவான சூழல், ஹெவிவெயிட் பங்குகளின் உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர்,நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in