பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 306 புள்ளிகள் வீழ்ச்சி 

பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 306 புள்ளிகள் வீழ்ச்சி 
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகத் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிந்து 59,377 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி17 புள்ளிகள் சரிவடைந்து 17,433 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. பின்னர் வீழ்ச்சியடைந்தது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 306.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,104.46 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி62.75 புள்ளிகள் சரிவடைந்து 17,388.15 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கி, வீழ்ச்சியை நோக்கிச் சென்றன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. டைட்டன் கம்பெனி, கோடக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, எம் அண்ட் எம், இன்போசிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in