Published : 26 Sep 2017 10:21 AM
Last Updated : 26 Sep 2017 10:21 AM
ஆட்டோமொபைல் துறையினர் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.
கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் பிப்ரவரி 9-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெறும். ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கண்காட்சி பிரகதி மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறும். இரு கண்காட்சிகளுக்குமான தொடக்க விழா பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.
இந்த ஆண்டு கூடுதலாக ஒரு நாள் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆட்டோமொபைல் கண்காட்சி, உதிரி பாகங்கள் கண்காட்சி ஆகிய இரண்டையும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு - சியாம், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (ஆக்மா) ஆகியன இணைந்து நடத்துகின்றன.
ஆட்டோ எக்ஸ்போவுக்கான டிக்கெட்டுகளை புக்மைஷோ.காம் இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT