Published : 18 Feb 2023 10:33 AM
Last Updated : 18 Feb 2023 10:33 AM

பிப்.18, 2023 | ஐந்து நாட்களுக்குப் பின்னர் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று சனிக்கிழமை (பிப்.18) சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.42,320-க்கு விற்பனையாகிறது..

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்த வாரம் திங்கள் தொடங்கி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 5 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் தை தொடங்கியே திருமண காலத்தில், திருமணத்திற்காக நகை வாங்குபவர்களுக்கு இந்த வாரம் லாபகரமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.5,290-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.42,320-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,216 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.71.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.71,800-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x