Published : 31 Jul 2014 10:40 AM
Last Updated : 31 Jul 2014 10:40 AM

தமிழக மீனவர்கள் 51 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு: கச்சத்தீவில் அகதிகளாக தஞ்சமடையும் போராட்டம் அறிவிப்பு

இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற தமிழக மீனவர்கள் 51 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

நெடுந்தீவு அருகே செவ்வாய்க் கிழமை அதிகாலை 5 விசைப் படகுகள் மற்றும் 2 நாட்டுப் படகுகளைக் கைப்பற்றி அதிலிருந்த 51 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றஞ் சாட்டி இலங்கை கடற்படையி னர் சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 51 மீனவர் களும் நாகப்பட்டினம், காரைக் கால், புதுக் கோட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

செவ்வாய்க்கிழமை இலங்கை யில் ரம்ஜான் விடுமுறை என்பதால் பருத்தித்துறை நீதிபதி குமாரசாமி இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தமிழக மீனவர்கள் 51 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். மீனவர் களை விசாரித்த நீதிபதி அவர்களை ஆக. 12-ம் தேதி வரையிலும் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து யாழ்ப் பாணம் சிறைச்சாலையில் தமிழக மீனவர்கள் 51 பேரும் அடைக் கப்பட்டனர்.

முன்னதாக இலங்கை கடற் படையினரால் கடந்த இரு மாதங் களில் கைப்பற்றபட்ட 62 விசைப் படகுகளையும், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரியும் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை 7-வது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தனர்.

மேலும் ஆக. 2-ம் தேதி விசைப்படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி கச்சத்தீவில் அகதிகளாக தஞ்சமடையும் போராட்டத்தை அறிவித்துள்ள ராமேசுவரம் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளில் வெள்ளைக் கொடிகளை கட்டி மீன்பிடி துறை முகத்தில் ஆயத்தமாக உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x