Published : 08 Feb 2023 07:25 PM
Last Updated : 08 Feb 2023 07:25 PM

இந்தியாவில் 9 மாதங்களில் ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் நிதித்துறையின் தரம் மேம்பட்டு வலுப்படுத்தப்படுவதுடன், குடிமக்களின் எளிதான வாழ்க்கைக்கும் உதவுகிறது. அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

2017-18 நிதியாண்டில் ரூ.2,071 கோடியாக இருந்த பரிவர்த்தனைகள், 2021-22 நிதியாண்டில் ரூ.8,840 கோடி பரிவர்த்தனைகளாக அதிகரித்தது. 2022-23 நிதியாண்டை பொறுத்தவரை கடந்த டிசம்பர் 31, 2022 வரை ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றன.

2017-18 நிதியாண்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு 1,962 லட்சம் கோடியாக இருந்தது. இது 2022-23 நிதியாண்டில் டிசம்பர் 31, 2022 வரை 2,050 லட்சம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மக்களவையில் இன்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x