Published : 06 Feb 2023 05:49 PM
Last Updated : 06 Feb 2023 05:49 PM

சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் சரிவில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 335 புள்ளிகள் (0.55 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,507 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் (0.50 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,765 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் சரிவடைந்து 60,640.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74.85 புள்ளிகள் சரிவடைந்து 17,779.20.80 ஆக இருந்தது.

பலவீனமான உலகளாவிய சூழல், அமெரிக்காவின் வேலைவாய்ப்பு அறிக்கையின் எதிரொலி, பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு நீண்டகாலம் தொடரலாம் என்ற அச்சம், தகவல் தொழில்நுட்பம் உலோக பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 334.98 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,506.90 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89.45 புள்ளிகள் சரிவடைந்து 17,764.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம் டாடா ஸ்டீல்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x