Published : 02 Feb 2023 06:13 PM
Last Updated : 02 Feb 2023 06:13 PM

சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 224 புள்ளிகள் (0.4 சதவீதம்) உயர்வடைந்து 59,932 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 6 புள்ளிகள் (0.03 சதவீதம்) சரிவடைந்து 17,650 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின. வர்த்த நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 10:13 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 43.55 புள்ளிகள் உயர்வடைந்து 59,751.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.60 புள்ளிகள் சரிவடைந்து 17,561.70 ஆக இருந்தது.

புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நேர்மறையான விஷயங்கள் இருந்தும், முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளின் சரிவின் மீது கவனத்துடன் இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கலவையான போக்குடனேயே பயணித்தன. சென்செக்ஸ் அதிக பட்ச ஏற்ற இறக்கமாக 60,007 முதல் 59,215 புள்ளிகள் வரை ஊசலாடியது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 224.16 புள்ளிகள் உயர்வடைந்து 59,932.24 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.90 புள்ளிகள் சரிவடைந்து 17,610.40 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி, இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், கோடாக் மேக்ந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றமடைந்திருந்தன.

டாடா மோட்டார்ஸ், ரிலையன் இன்டஸ்ட்ரீஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெல்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃபிசி பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல்,டை்டன் கம்பெனி,ஹெச்டிஎஃபிசி, என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x