பங்குச்சந்தை | சென்செக்ஸ் 229 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,817 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 78 புள்ளிகள் உயர்வடைந்து 18,105 ஆக இருந்தது.

கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவு செய்திருந்த பங்குச்சந்தைகள் மூன்றாவது வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:27மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 229.46 புள்ளிகள் உயர்ந்து 60,851.23 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.80 புள்ளிகள் உயர்வடைந்து 18,118.45 ஆக இருந்தது

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழ்நிலை, ஆரம்ப காலண்டின் நேர்மறையான செய்திகள், கச்சா எண்ணெய் விலை குறைப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஐசிஐசிஐ, கோடாக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, டிசிஎஸ் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in