சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 390 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 390 புள்ளிகள் (0.64 சதவீதம்) உயர்வடைந்து 61,045 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 112 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயர்வடைந்து 18,165 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி புதன்கிழமை வர்த்தகத்தைத் தொடங்கின. காலை 09.41 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 88.48 புள்ளிகள் உயர்வடைந்து 60,744.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 14.25 புள்ளிகள் உயர்ந்து 18,067.55 ஆக இருந்தது.

உலக அளவில் நிலவிய சாதமான சூழல், தேர்ந்தெடுக்கப்பட்ட உலோக, நிதி பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக லாபத்தில் நிறைவடைந்துள்ளன. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை சரிந்து 60,569 ஆக இறங்கியது, பின்னர் மீண்டு லாபத்தில் நிறைவடைந்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 390.02 புள்ளிகள் உயர்வடைந்து 61,045.74 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 112.05 புள்ளிகள் உயர்வடைந்து 18,165.35 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் உயர்ந்திருந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in