Published : 13 Jan 2023 06:37 PM
Last Updated : 13 Jan 2023 06:37 PM

சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதிநாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 303 புள்ளிகள் (0.51சதவீதம்) உயர்வடைந்து 60,261 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்வடைந்து 17,965 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் நேற்றைய வீழ்ச்சியின் தொடர்ச்சியாகவே இன்றைய வர்த்தகத்தையும் சரிவுடனேயே தொடங்கியன. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 267.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,690.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.95 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 17,824.25 ஆக இருந்தது.

குறிப்பிட்ட சில ஹெவி வெயிட் குறியீடுகளின் உயர்வு, உள்நாட்டு அமெரிக்க சில்லறை பணவீக்கம் மெதுவாக குறைக்கப்படும் என்ற தகவல் ஏற்படுத்திய நம்பிக்கை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தங்களது மூன்று நாள் வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உதவின. இதனால் பங்குச்சந்தைகள் வார இறுதி வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தது.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 303.15 புள்ளிகள் உயர்வடைந்து 60,261.18 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98.40 புள்ளிகள் உயர்வடைந்து 17,956.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், என்டிபிசி, மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ் பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி, கோடாக் மகேந்திரா பங்குகள் உயர்ந்திருந்தன. ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீட்ஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x