

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வார இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 221 புள்ளிகள் (0.35 சதவீதம்) சரிந்து 59,736 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24 புள்ளிகள்(0.14 சதவீதம்) சரிந்து 17,833 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் நேற்றைய வீழ்ச்சியின் தொடர்ச்சியாக இன்று மீண்டும் சரிவுடனேயே தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 267.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,690.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.95 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 17,824.25 ஆக இருந்தது.
ஆசிய பங்குச்சந்தைகளின் இன்றைய மந்தமான வர்த்தக போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. 100 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் உடனடியாக 222 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எம் அண்ட் எம், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், ஹெட்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி,விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.