Published : 14 Dec 2016 09:34 AM
Last Updated : 14 Dec 2016 09:34 AM

இவரைத் தெரியுமா?- நாகேஷ் ராஜண்ணா

பாம்பே டையிங் சில்லரை வர்த்தக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.

பிளே டூ பொட்டன்ஷியல் நிறுவனத்தின் இணை நிறுவனர். 2012-ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை இந்த நிறுவனத்தில் செயல்பட்டார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் முதன்மை துணைத் தலைவர், பியூச்சர் ஜெனரலி இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தவர்.

2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

1994-ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் பெப்சிகோ நிறுவனத்தில் செயல் துணைத் தலைவராகவும், பார்லே நிறுவனத்தின் பொது மேலாளராக 4 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

மைசூர் பல்கலைக் கழகத்தில் மேலாண்மையியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x