Published : 27 Dec 2022 04:20 PM
Last Updated : 27 Dec 2022 04:20 PM

சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செவ்வாய்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்து. சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்வடைந்து 60,927 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117 புள்ளிகள் உயர்வடைந்து 18136 ஆக இருந்தது.

கடந்த வாரத்தின் சரிவில் இருந்து மீண்டு இரண்டாவது நாளாகவும் செவ்வாய்கிழமை 250 புள்ளிகள் உயர்வுடன் பங்குச்சந்தை வர்த்தகம் தொங்கியது. காலை 09:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 400.18 புள்ளிகள் உயர்வடைந்து 60,966.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,089.80 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், சீனாவில் கரோனா கட்டுபாடுகளின் தளர்வு போன்ற காரணங்கள் இந்திய பங்குச்சந்தைகளை லாபத்தில் பயணிக்க உதவி செய்தன. வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கத்தில் சென்ற பங்குச்சந்தை இறுதியில் உயர்வுடன் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 361.01 புள்ளிகள் உயர்வடைந்து 60,927.43 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 117.70 புள்ளிகள் உயர்ந்து 18,132.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், எல் அண்ட் டி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. எம் அண்ட் எம், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x