Published : 27 Dec 2022 09:59 AM
Last Updated : 27 Dec 2022 09:59 AM

சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து 60,852 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு அடைந்து 18,050 ஆக இருந்தது.

கடந்த வாரத்தில் கடுமையான வீழ்ச்சியிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய ஏற்றத்தை இன்றும் தொடர்ந்தன. காலை 09:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 400.18 புள்ளிகள் உயர்வடைந்து 60,966.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.20 புள்ளிகள் உயர்வடைந்து 18,089.80 ஆக இருந்தது.

உலகலாளவிய சாதகமான சூழல், ஆண்டின் இறுதி நெருங்கி வருவதால் அதிகரித்துள்ள பங்குகளை வாங்கும் எண்ணம் ஆகிய காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்தில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x