Published : 27 Dec 2022 06:54 AM
Last Updated : 27 Dec 2022 06:54 AM

சட்டவிரோத கால் சென்டர்களால் அமெரிக்கர்களுக்கு ரூ.83,000 கோடி இழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் மோசடி சம்பவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (எப்பிஐ) கூறியிருப்பதாவது:

அமெரிக்கர்களிடம் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் சட்ட விரோதமாக இயங்கி வரும் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) மூலம் புதுப்புது வகையில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன.

இந்த கும்பல், போலியான மின்னஞ்சல் மற்றும் மறைமுகமான வகையில் செய்தி களை அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, வயதான அமெரிக்கர்களிடம் கனிவாக பேசி, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 300 கோடி டாலரை (ரூ.25,000 கோடி) அந்த கும்பல்கள் மோசடி செய்துள்ளன.

அனைத்து இண்டர்நெட் மற்றும் கால் சென்டர் மூலமாக நடைபெற்ற மோசடியால் நிகழாண்டில் கடந்த 11 மாதங்களில் மட்டும் அமெரிக்கர்களுக்கு மொத்தம் 10,200 கோடி டாலர் அளவிற்கு (ரூ.83 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இது, கடந்தாண்டில் நடத்தப்பட்ட மோசடியான 690 கோடி டாலருடன் (ரூ.56,580 கோடி) ஒப்பிடும்போது 47 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2021-ல் இணைய குற்றங்கள் தொடர்பாக 8.5 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், 2022 முதல் 11 மாதங்களில் இந்த எண்ணிக்கை 7.8 லட்சத்தை தாண்டியுள்ளது.

முதலீடு (300 கோடி டாலர்), பிஸினஸ் இமெயில் (240 கோடி டாலர்), தனி நபர் தரவு (120 கோடி டாலர்), கனிவான உரை யாடல் (100 கோடி டாலர்), அதிநவீன தொழில் நுட்பம் (78 கோடி டாலர்) உள்ளிட்ட பல வகையான மோசடிகளால் அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு எப்பிஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x