Published : 26 Dec 2022 05:42 PM
Last Updated : 26 Dec 2022 05:42 PM

மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்து சென்செக்ஸ் 721 புள்ளிகள் (1.20 சதவீதம்) உயர்வடைந்து 60,566 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207 புள்ளிகள் (1.17 சதவீதம்) உயர்வடைந்து 18,014 ஆக இருந்தது.

திங்கள்கிழமை 300 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை வர்த்தகம், கடந்த வாரத்தின் சரிவில் இருந்து மீண்டு தொடர்ந்து ஏற்றத்தை நோக்கிச் சென்றது. காலை 09:39 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 441.05 புள்ளிகள் உயர்ந்து 60,286.34 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73.20 புள்ளிகள் உயர்ந்து 17,880.00 ஆக இருந்தது.

வட்டிவிகிதம் அதிகரிப்பு, சீனாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு ஆகிய அச்சங்களுக்கு மத்தியில், உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தங்களின் சரிவில் இருந்து மீண்டன. காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்திலேயே பயணித்தன. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 989.49 புள்ளிகள்(1.65 சதவீதம்) வரை உயர்ந்து 60,834 வரை சென்றது. பார்மா பங்குகளைத் தவிர அனைத்துத்துறை பங்குகளும் உயர்வில் இருந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 721.13 புள்ளிகள் உயர்வடைந்து 60,566.42 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207.80 புள்ளிகள் உயர்ந்து 18,014.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், டிசிஎஸ், பஜாஜ் ஃபினான்ஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், இன்ஃபிசிஸ், பவர் கிரீடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்ந்திருந்தன. டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x