Last Updated : 25 Dec, 2016 12:40 PM

 

Published : 25 Dec 2016 12:40 PM
Last Updated : 25 Dec 2016 12:40 PM

நுகர்வோர் குறைகளை தீர்க்க இரண்டு புதிய செயலிகள் அறிமுகம்

நுகர்வோர் குறைகளை ஆன் லைன் மூலமாக விரைந்து தீர்ப்பதற்கு மத்திய அரசு இரண்டு புதிய செயலிகளை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் கன்ஸ்யூமர் மற்றும் ஆன்லைன் கன்ஸ்யூமர் மீடியேஷன் சென்டர் என்ற இரண்டு புதிய செயலிகளை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அறிமுகப்படுத்தினார்.

நேற்று தேசிய நுகர்வோர் தினத்தையொட்டி புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கலந்துகொண்டு பேசியதாவது:

இது தொழில்நுட்பத்திற்கான காலம். டிஜிட்டல் முறையில் நுகர் வோரின் குறைகளைத் தீர்க்க வேண்டும். அதற்கு அவர் களுக்கு டிஜிட்டல் பற்றி பயிற்று விக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் கன்ஸ்யூமர் செயலி மூலம் பொருட்களை பற்றிய விவரங் களைத் தெரிந்து கொள்ளலாம். டிஜிட்டல் உலகத்தில் ஆன்லைன் மூலமாக மிகப் பெரிய பயனை அடைய முடியும். குறிப்பாக ஆன்லைன் குழுக்கள் மூலம் நுகர்வோர்களின் கருத்துகளைக் கேட்டறிய முடியும். மேலும் அவர்க ளுடைய குறைகள் மற்றும் அனுப வங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

நுகர்வோர் அமைச்சகம்தான் மத்தியிலும் மாநிலங்களிலும் மிகவும் புறக்கணிக்கப்பட்ட அமைச் சகமாக இருந்து வருகிறது. 1.23 கோடி நுகர்வோர்களின் நலன்களை பாதுகாத்து வந்த போதிலும் இந்த அமைச்சகம் மிக புறக்கணிக்கப்பட்டதாக இருக் கிறது. ஊழியர்கள் பற்றாக்குறை, மாநிலங்கள் மற்றும் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் சரி யான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இது போன்று வசதிகள் குறைவாக இருந்த போதும் கூட கடந்த 30 வருடங்களில் 41 லட்சம் நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

நுகர்வோர் நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட தேவையான வசதிகளை மாநில அரசுகள் வழங்க வேண்டும். புதிய நுகர் வோர் பாதுகாப்பு மசோதா தற் போது நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க பல் வேறு மாற்றங்களை மத்திய அரசு இந்த மசோதாவில் கொண்டு வந் துள்ளது.

1986-ம் ஆண்டு நுகர் வோர் சட்டம் கொண்டு வரப்பட்ட திலிருந்து இதுவரை 41 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டுள்ளன. இந்த எண் மிகக் குறைவுதான். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, இன்னும் 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தேவையான உள்கட்ட மைப்பு வசதி இல்லை. ஊதியமும் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்த கூட்டாட்சி அமைப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்தப் பிரச்சினைகளை குறிப் பிட்ட காலத்திற்குள் தீர்க்க வேண்டும். இவ்வாறு பாஸ்வான் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x