

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 62,408 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,579 ஆக இருந்தது.
வியாழக்கிழமை காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 269.36 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 62,408.55 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80.65 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18579.65 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் பலவீனமான சூழல்கள், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிக அதிகரிப்பு ஆகியவைகளின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் இன்று சரிவுடனேயே தொடங்கியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹெச்டிஎஃப்சி, எல் அண்ட் டி, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் வீழ்ச்சியில் இருந்தன.