Published : 09 Dec 2022 09:17 PM
Last Updated : 09 Dec 2022 09:17 PM

50 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை: அரசு தகவல்

கோப்புப்படம்

நாடு முழுவதும் 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இதுவரை 5ஜி தொலைத்தொடர்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடந்த நவம்பர் 26-ம் தேதி வரை 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 50 நகரங்களில் இந்த சேவை வழங்கப்பட்டிருக்கிறது.

அதிவேக தொலைத்தொடர்பு சேவையை வழங்க ஏதுவாக மத்திய அரசு பின்வரும் கொள்கை நடவடிக்கைகளை முன்னிறுத்தி வருகிறது.

  • செல்போன் தொலைத்தொடர்பு சேவையை தங்கு தடையின்றி வழங்க ஏலம் மூலம் அலைவரிசை ஒதுக்கீடு.
  • அலைவரிசை பங்கீடு மற்றும் வணிகத்திற்கு அனுமதி.
  • அலைவரிசை பங்கீட்டிற்கான கூடுதல் அலைவரிசை பயன்பாடு கட்டணம் 0.5 சதவீதம் நீக்கம்.
  • தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ள அனுமதி.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் தேவுசின் சவ்ஹான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x