Last Updated : 09 Dec, 2016 10:30 AM

 

Published : 09 Dec 2016 10:30 AM
Last Updated : 09 Dec 2016 10:30 AM

இந்திய பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 457 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தை குறியீடுக ளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை நேற்றைய வர்த்த கத்தில் 1.8 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டன. சர்வதேச சந்தை ஏற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

நேற்றைய வர்த்தகத்தின் முடி வில் சென்செக்ஸ் 457 புள்ளிகள் உயர்ந்து 26694 புள்ளிகளுடனும் நிப்டி 144 புள்ளிகள் உயர்ந்து 8246 புள்ளிகளுடனும் முடிவடைந்தன.

கடந்த புதன்கிழமை நடை பெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டது. இதனால் புதன் கிழமை வர்த்தகத்தின் முடிவில் இந்திய பங்குச்சந்தை சரிந்து காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதலே சர்வதேச சந்தைகள் உயர்ந்து காணப்பட்டதால் இந்திய பங்குச்சந்தை அதிகரித்தது. இதனால் நேற்று முன் தினம் சரிவை சந்தித்த பங்குகள் மீள்வதற்கு நேற்றைய வர்த்தகம் உதவியது.

மும்பை பங்குச் சந்தையில் மெட்டல் துறை பங்குகள் 2.93 சதவீதம் ஏற்றம் கண்டன. ஆட்டோ மொபைல் துறை 2.63 சதவீதமும் உள்கட்டமைப்புத் துறை 1.87 சதவீதமும் ஏற்றம் கண்டன.

நேற்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு 4.62 சதவீதம் ஏற்றம் கண்டது. என்டிபிசி நிறுவனத்தின் பங்கு 0.06 சதவீதம் சரிவைக் கண்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x