Published : 01 Dec 2016 09:04 PM
Last Updated : 01 Dec 2016 09:04 PM
மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அதே சமயம் விமான எரிபொருள் கட்டணம் (ஏடிஎப்) 3.7 சதவீதம் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்குப் பிறகு மானிய விலையிலான 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.432.71 ஆக விலை இருக்கும். இதற்கு முன்பு 430.64 ஆக இருந்தது.
விமான எரிபொருள் விலை 3.7 சதவீதம் குறைக்கப்பட்டு ஒரு கிலோ லிட்டர் ரூ. 48,739.63 என்ற விலையில் டெல்லியில் விற்கப்படும். இந்த விலை உயர்வு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும்.
சமையல் எரிவாயுக்கான மானிய சுமையை குறைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் ரூ.2 விலை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி கடந்த ஜூலை மாதம் முதல் ஏழாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நவம்பர் 1 ம் தேதி ரூ.2.05 விலை உயர்த்தப்பட்டது. அக்டோபர் 1 ம் தேதியில் மானிய சிலிண்டரின் விலை 427.09 ரூபாயாக இருந்தது.
மாதாந்திர அளவில் விலையை உயர்த்தி, மானியத்திலிருந்து வெளியேறுவது என்கிற முடிவில் அரசு ஏற்கெனவே டீசல் மானியத்திலிருது வெளியேறியது. அதே வழியைப் பின்பற்றி தற்போது எரிவாயு மானியத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.
விமான எரிபொருளுள் கட்டணம் இரண்டாவது முறையாக விலை ஏற்றம் கண்டுள்ளது. முன்னதாக நவம்பர் 1ம் தேதி 7.3 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது.
மண்ணெண்ணெய் மானிய சுமையிலிருந்து வெளியேற பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை 50 காசுகள் வீதம் 10 மாதங்களுக்கு உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஜூலை மாதத்திலிருந்து இதன் விலையும் உயர்வு 9 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் சர்வதேச செலாவணி மதிப்பின் அடிப்படையில் மாதத்தின் முதல் தேதியில் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT