Published : 25 Nov 2022 07:42 AM
Last Updated : 25 Nov 2022 07:42 AM

ஷிபவுரா மெஷின் சென்னையில் ரூ.225 கோடி முதலீட்டில் புதிய ஆலை

சென்னை: ஜப்பானிய நிறுவனமான ஷிபவுரா மெஷின் சென்னையில் 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. இன் ஜெக்சன் மோல்டிங், மெஷின் டூல், டை-காஸ்டிங் உள்ளிட்ட இயந்திரங்களை இந்நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிறுவனம் ரூ.225 கோடி முதலீட்டில் புதிய ஆலை கட்டுமானத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டியுள்ளது.

தற்போது இந்நிறுவனம் அதன்சென்னை ஆலையில் ஆண்டுக்கு 1,200 இன்ஜெக்‌ஷன் மோல்டிங் இயந்திரங்களை தயாரிக்கிறது. இந்நிலையில், அதை 3,200 ஆகஉயர்த்த 2-வது ஆலையை கட்டுகிறது. இந்தப் புதிய ஆலை 2023 நவம்பர் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x