Published : 18 Nov 2022 10:31 AM
Last Updated : 18 Nov 2022 10:31 AM

சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிவு 

கோப்புப்படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிந்து 61,642 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 18,317 ஆக இருந்தது.

வியாழக்கிழமை பங்குச்சந்தை 230 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்திருந்த நிலையில், வெள்ளிக்கிழமை சந்தையில் சென்செக்ஸ் 50 புள்ளிகள் உயர்வுடன் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 108.52 புள்ளிகள் சரிவுடன் 61,642.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 26.35 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,317.55 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தையின் கலவையான போக்கு, மாற்றம் இல்லாத கச்சா எண்ணெய் விலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடக்கம் பெற்றது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்த வரை ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல்ஸ் ஆகிய பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. மறுபுறம், ஐடிசி, விப்ரோ, ரிலையன்ல் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம் ஆகிய பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x