

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 152 புள்ளிகள் (0.25 சதவீதம்) சரிந்து 61,033 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,157 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 135.64 புள்ளிகள் ஏற்றத்துடன் 61,320.79 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் 55.35 புள்ளிகள் உயர்வுடன் 18,258.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தையின் சாதகமான போக்கு, வலுவடைந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடனேயே தொடங்கியது. வர்த்தக நேரத்தின்போது ஏற்ற இறக்கத்துடன் பயணித்து இறுதியில் சரிவில் நிறைவடைந்தது. வங்கிப் பங்குகளைத் தவிர மற்ற பங்குகள் அனைத்தும் சரிவைச் சந்தித்திருந்தன.
இன்றைய வர்த்த நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 151.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,033.55 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.80 புள்ளிகள் சரிந்து 18,157.00 ஆக இருந்தது
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஐடிசி பங்கு ஏற்றத்தில் இருந்தன. ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டாடா ஸ்டீல்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் லீவர், எம் அண்ட் எம் உள்ளிட்ட பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.