Published : 01 Nov 2022 06:09 AM
Last Updated : 01 Nov 2022 06:09 AM

போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் 3-ம் இடம் பிடித்தார் கவுதம் அதானி - ஜெப் பிஸோஸ் பின்தங்கினார்

கவுதம் அதானி

புதுடெல்லி: போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஜெப் பிஸோஸை பின்னுக்குத் தள்ளி கவுதம் அதானி மீண்டும் 3-ம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய தொழிலதிபரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஆண்டு மளமளவென உயர்ந்தன. இதனால், போர்ப்ஸ் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் வேகமாக முன்னேறிய கவுதம் அதானி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-ம் இடம் பிடித்தார். பின்னர் அவரது அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்ததால் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னர் 4-ம் இடத்துக்கு பின்தங்கினார்.

இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் அதானி குழும பங்குகள் உயர்ந்து வந்தன. நேற்று ஒரே நாளில் அவரது பங்குகளின் மதிப்பு ரூ.2,600 கோடி உயர்ந்து ரூ.10.92 லட்சம் கோடியானது. இதையடுத்து, அவர் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் 3-ம் இடத்தைப் பிடித்துள் ளார். இதுவரை 3-ம் இடத்தில் இருந்து வந்த அமேசான் நிறுவனர் ஜெப் பிஸோஸ் ரூ.10.5 லட்சம் கோடியுடன் 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

லூயிஸ் வுட்டான் நிறுவனத்தின் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.12.95 லட்சம் கோடியுடன் 2-ம் இடத்தில் நீடிக்கிறார். இந்த 3 பேரும் பட்டியலில் மாறி மாறி இடம் பிடித்து வருகின்றனர். ஆனால், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ரூ.18.5 லட்சம் கோடி சொத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x