Last Updated : 29 Nov, 2016 10:44 AM

 

Published : 29 Nov 2016 10:44 AM
Last Updated : 29 Nov 2016 10:44 AM

சேலம் உருக்காலை பங்கு விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி

சேலம் உருக்காலை பங்கு விற்பனைக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித் துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய உருக்குத் துறை இணை அமைச்சர் விஷ்ணு தியோ சாய் நேற்று மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: சேலம் உருக் காலையின் பங்குகள் விற்பனைக்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய உருக்கு ஆணையத்தின் (செயில்) கீழ் இயங்கி வரும் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சேலம் உருக்காலையை நவீனமயமாக்கும் மற்றும் விரிவுபடுத்தும் திட்டத்தின் கீழ் சைல் ரூ.2,200 கோடி முதலீடு செய்தது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x