Published : 21 Oct 2022 07:36 AM
Last Updated : 21 Oct 2022 07:36 AM

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு விரைவில் ரூ.84 ஆக சரியும்: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்றைய அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.12 ஆக சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். எனினும், வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு மீண்டு ரூ.82.71 ஆக நிலைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா–உக்ரைன் இடையில் போர் தொடங்கியது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறத் தொடங்கின. மேலும், இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்ததன் காரணமாகவும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

கடந்த பிப்ரவரியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.74.55 ஆக இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் முதல்முறையாக ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக வீழ்ந்தது. நேற்று காலையில் ரூ.83.12 ஆக சரிந்தது. தற்போதைய நிலை தொடரும்பட்சத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு விரைவிலே ரூ.84-ஆக சரியும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x