Published : 12 Nov 2016 09:06 AM
Last Updated : 12 Nov 2016 09:06 AM
மாநிலங்களுக்குள் பொருட்கள் வருவதற்கு நுழைவு வரியை மாநில அரசு விதிப்பது செல்லும் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
தற்போது மாநிலங்களுக்கு இடையே பொருள்களை எடுத் துச் செல்லும் போது நுழைவு வரி விதிக்கப்படுகிறது. இந்த நுழைவு வரியானது மாநிலத் துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
இதை எதிர்த்து தனியார் பொருள் உற்பத்தி நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ். தாக்குர் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் 7 நீதிபதிகள், மாநிலங் களுக்கு இடையே பொருள் களுக்கு மாறுபட்ட நுழைவு வரி விதிப்பது செல்லும் என்றும் அதற்கு அரசியல் அமைப்பு சட் டத்தில் இடம் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளனர். மேலும் அர சியலமைப்புச் சட்ட விதி 304பி-ன் கீழ் மாநிலங்களின் வரி தொடர் பான சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை யில்லை என்று கூறியுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாக்குர் கூறுகை யில், ‘`மற்ற மாநிலங்களிலிருந்து வரும் பொருட்களுக்கு நுழைவு வரியை விதிப்பதற்கு அதிகாரம் இருக்கிறது. பொருட்களுக்கு இடையே எந்தவொரு வேறுபாடும் இருக்கமுடியாது’’ என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ்.தாக்குர் நீங்க லாக, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்ஏ.போப்டே, எஸ்கே.சிங், என்வி.ரமணா, ஆர்.பானுமதி, ஏஎம். கான்வில்கர் ஆகியோர் மாநிங்களுக்கு வரி விதிக்கலாம் என்பதற்கு ஆதரவாக இருந் தனர்.
மாநிலங்களுக்கு இடையே வரும் பொருட்கள் மீது நுழைவு வரியை விதிக்கலாம். ஆனால் மற்ற மாநிலங்களில் இருந்து வரும் குறிப்பிடத்தக்க பொருட் களுக்கு அதிக நுழைவு வரியை விதிப்பதற்கு மாநிலங்களுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT