Published : 07 Oct 2022 05:39 AM
Last Updated : 07 Oct 2022 05:39 AM

செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யலாம் - ஆகாஸா ஏர் அறிவிப்பு

புதுடெல்லி: ஆகாஸா ஏர் கடந்த ஆகஸ்ட் 7-ல் பயணிகள் விமான சேவையை தொடங்கியது. சேவை தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பெல்ஸன் கவுட்டின்ஹோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

விமானப் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் எங்களது விமானங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லலாம். இந்த பயணத்துக்கான முன்பதிவு அக்டோபர் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

ஒரு பயணிக்கு ஒரு செல்லப்பிராணி என்ற வகையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். செல்லப்பிராணியின் எடை 7 கிலோ வரை இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனத்துக்கு சொந்தமாக 6 விமானங்கள் உள்ளன. இதனை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 18 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x