

செயல்பாட்டில் இல்லாத பிஎப் கணக்குகளுக்கும் 8.8 சதவீத வட்டி அளிக்குமாறு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (இபிஎப்ஓ) உத்தரவிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
2011-ம் ஆண்டிலிருந்து இவ் விதம் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளுக்கு வட்டி விகிதம் வழங்கப்படவில்லை. இத்தகைய கணக்குகளை மீண்டும் செயல் படுத்த வசதியாக இவற்றுக்கு வட்டி வழங்குமாறு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் ஜேட்லி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்விதம் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளுக்கு வட்டி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டு விட்டதாகக் குறிப்பிட்ட அவர், இத்தொகைக்கு 8.8 சதவீதம் வட்டி அளிக்கப்படும். இதனால் ஊழியர்கள் பயனடை வர். இது தீபாவளி பண்டிகைக் கான அறிவிப்பு. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
செயல்படுத்தப்படாத கணக் கில் ரூ.42 ஆயிரம் கோடி தொகை உள்ளது. இந்தத் தொகைக்கு தற்போது வட்டி வழங்கப்பட உள்ளது. வட்டி வழங்கப்படுவ தால் தொழிலாளர்கள் தங்களது முதலீடுகளை செயல்படுத்தப் படாத கணக்கில் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத் திருக்க முடியும். இந்தக் கணக்குகள் ஒரு போதும் உரிமை கோரப்படாத கணக்குகள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிஎப் கணக்கில் 36 மாதங் கள் எவ்வித பரிவர்த்தனையும் இல்லாவிடில் அது செயல் பாட்டில் இல்லாத கணக்காகக் கருதப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருவருக்கே பல பிஎப் கணக்குகள் இருப்பதைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்த பிறகு வட்டித் தொகை வழங்கப்படும் என்று தத்தாத்ரேயா குறிப்பிட்டார்.