Published : 04 Sep 2022 06:47 AM
Last Updated : 04 Sep 2022 06:47 AM

ரூ.1.14 லட்சம் கோடியை திருப்பி வழங்கியது வருமான வரித் துறை

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் வருமான வரித் துறை ரூ.1.14 லட்சம் கோடியை திருப்பி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை, 1.97 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1.14 லட்சம் கோடியை திருப்பித் தந்துள்ளோம். இதில், வருமான வரி ரூ.61,252 கோடியும் கார்ப்பரேட் நிறுவன வரி ரூ.53,158 கோடியும் அடங்கும்” என கூறப்பட்டுள்ளது.

நடப்பு 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில் நேரடி வரி வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதே காலத்தில் கார்ப்பரேட் வரியாக ரூ.7.23 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாகவும் வரித்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x