Published : 10 Oct 2016 11:15 AM
Last Updated : 10 Oct 2016 11:15 AM
ரிலையன்ஸ் ஜியோ சேவை தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் 1.6 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்திருக்கிறார்கள் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:
தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் 1.6 கோடி வாடிக்கையாளர்களை டெலிகாம் நிறுவனங்கள் அல்லது பேஸ்புக், வாட்ஸ்ஆப், ஸ்கைப் போன்ற நிறுவனங்கள் கூட இந்த இலக்கை எட்டியதில்லை.
ரியோவுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மக்கள் எங்கள் நிறுவனத்தை அங்கீகரித்திருக்கிறார்கள். நாளுக்கு நாள் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ அறிமுக விழாவின்போது, 10 கோடி வாடிக்கையாளர்களை கைப்பற்றுவது எங்கள் இலக்கு என முகேஷ் அம்பானி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
அக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் 3.5 கோடி 4ஜி வாடிக்கையாளர்கள் ஜியோ வசம் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT