2022 ஏப்ரல் 1 - ஜூலை 31 வரை சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை

2022 ஏப்ரல் 1 - ஜூலை 31 வரை சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கும், கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் 8.68 கோடி நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது என்று இந்திய தரநிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி அனைத்து தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டில் ஜூலை மாதத்தில் 43 ஆயிரத்து 153 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டதிலிருந்து ஆகஸ்ட் 1, 2022 ல் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 497 தங்க நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தங்க நகை ஆபரணங்களுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த துறையில் சில குறிப்பிட்டத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. அவை:

  • நகை வியாபாரிகளுக்கான பதிவு இலவசமாக்கப்பட்டு, ஆயுட் காலத்திற்கு செல்லுபடியாக மாற்றப்பட்டது
  • கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி ஹால்மார்க் தனித்துவ அடையாளத்தின் கீழ் ஹால் மார்க் இணையம் தொடங்கப்பட்டது. அந்த இணையம் மூலம் தங்க நகைகளுக்கான மதிப்பீடு மற்றும் ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு ஆன்லைன் ஆக்கப்பட்டன.
  • கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி 948 ஹால்மார்க் முத்திரை வழங்கும் மையத்திலிருந்து 2022-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி 1,220 மையமாக உயர்ந்துள்ளது.
  • ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்ட தங்க நகை ஆபரணங்களின் தரத்தை ‘verify HUID’’ என்ற செயலி மூலம் சோதனை செய்யும் நடைமுறை கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி அமலுக்கு வந்தது

இந்திய தரநிர்ணய அமைப்பின் www.bis.gov.in.என்ற இணைய தளத்தில் 288 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அதிக மாவட்டங்களின் தகவல்களை, இந்த இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in