Published : 09 Oct 2016 11:52 AM
Last Updated : 09 Oct 2016 11:52 AM

சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.800 கோடி அபராதம்

ஆப்பிள் - சாம்சங் நிறுவனங்களுக் கிடையிலான வழக்கில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை மீறல் காரணமாக ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 கோடி டாலர் (சுமார் ரூ.800 கோடி) அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இரு நிறுவனங்களுக்கிடை யிலான இந்த வழக்கில் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதற்கு எதிராக ஆப்பிள் மேல் முறையீடு செய்திருந்தது.

சாம்சங் நிறுவனம் தங்களது காப்புரிமையான சிலவற்றை பயன்படுத்தியுள்ளதாக ஆப்பிள் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் தனது தரப்பு ஆதாரங்களை நிரூபிக்க தவறிய தாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x