Published : 13 Aug 2022 06:10 AM
Last Updated : 13 Aug 2022 06:10 AM

ஜூலை மாதம் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைவு

புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையிலன போர் காரணமாக சர்வதேச அளவில் பணவீக்கம் உச்சம் அடைந்தது. இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால், கடந்த ஏழு மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேல் நீடித்துவந்தது. அதிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் பணவீக்கம் 7 சதவீதத்துக்கு மேல் நீடித்தது. இந்நிலையில், ஜூலையில் பணவீக்கம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x