Last Updated : 24 May, 2016 10:29 AM

 

Published : 24 May 2016 10:29 AM
Last Updated : 24 May 2016 10:29 AM

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சொத்து மதிப்பு 16% உயர்வு

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதம் அதிகரித்து ரூ.3.57 லட்சம் கோடியாக உள்ளது. சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடுகள் மேற்கொண் டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இந்திய மியூச்சுவல் பண்ட் கூட்டமைப்பின் (ஆம்ஃபி) வெளியிட்ட சமீபத்திய புள்ளி விவரங்கள்படி இது தெரிய வந் துள்ளது. முக்கியமாக இந்திய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு ஏப்ரல் மாத நிலவரப்படி ரூ.3.57 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத் தில் ரூ.3.06 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சொத்து மதிப்பு 3.45 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் ரூ.78,000 கோடி முதலீடுகளை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் மேற்கொண் டிருந்த போதிலும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த ஒரு ஆண்டு காலத்தில் 5 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையிலும் சிறு முதலீட்டாளர் கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது என்று சந்தை நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பங்கு கள் மற்றும் பங்குகள் சார்ந்த சேமிப்பு திட்டங்களில் ரூ.4,438 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ள து. இது கடந்த ஐந்து மாதங்களை விட அதிகமான முதலீடாகும். நவம்பர் மாதத்துக்கு பிறகு அதிக முதலீடு உள்வந்துள்ளது. பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங் களில் ரூ.6,379 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தி யாவில் செயல்பட்டுவரும் 43 மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் ஈக்விட்டி திட்டங்களுக்கு ரூ.14.22 லட்சம் கோடி வந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் காலாத்தில் ரூ.11.86 லட்சம் கோடியாக இருந் தது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x