Published : 14 May 2016 10:08 AM
Last Updated : 14 May 2016 10:08 AM

அசோக் சாவ்லா நியமனத்துக்கு ‘செபி’ ஒப்புதல்

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) தலைவராக அசோக் சாவ்லா நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக இவர் போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக (சிசிஐ) இருந்தார். இவரது நியமனத்துக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) அனுமதி வழங்கி இருக்கிறது. இவரது நியமனம் மே 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2019-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார்.

கடந்த மாதம் என்எஸ்இயின் பொது நல இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஐந்தாண்டு காலம் சிசிஐ தலைவர் பதவியில் இருந்து, கடந்த ஜனவரியில் ஓய்வு பெற்றார். முன்னதாக நிதிச் செயலாளர், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் யெஸ் வங்கியின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டார். தினசரி அலுவல்கள் அல்லாத தலைவராக நியமிக்க ரிசர்வ் வங்கியின் அனுமதியை யெஸ் வங்கி கோரியிருக்கிறது.

அசோக் சாவ்லாவுக்கு முன்பு என்எஸ்இயின் தலைவராக எஸ்பி மாத்தூர் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x