பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா

பாமாயில் ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தோனேசியா
Updated on
1 min read

ஜகார்த்தா: உலகில் அதிக அளவில் பாமாயில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தோனேசியா கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இந்தோனேசியாவில் பாமாயில் விலை 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததால், உள்நாட்டில் பாமாயில் தாராளமாகக் கிடைக்கவும் விலையை கட்டுப்படுத்தவும் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக இந்தோனேசியா அறிவித்தது.

இந்நிலையில், வரும் 23-ம் தேதி முதல் பாமாயில் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா அறிவித்துள்ளார்.

உள்நாட்டில் பாமாயில் விநியோகத்தில் நிலைமை மேம்பட்டுள்ளதாலும் பாமாயில் துறையில் பணியாற்றும் 1.70 கோடி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in