Last Updated : 26 May, 2016 09:39 AM

 

Published : 26 May 2016 09:39 AM
Last Updated : 26 May 2016 09:39 AM

கடன் சுமையில் தவிக்கும் நிறுவனங்கள் சொத்து ரூ. 2 லட்சம் கோடிக்கு விற்பனையாகும்: எஸ்பிஐ கணிப்பு

நெருக்கடியில் தவிக்கும் நிறு வனங்கள் தங்களது கடன் சுமை யைக் குறைக்க ஆதாயம் தராத சொத்துகளை விற்க முடிவு செய் துள்ளன. இந்தவகையில் விற் பனை செய்ய உள்ள சொத்து களின் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கணித் துள்ளது.

இவ்விதம் விற்பனையாக உள்ள சொத்துகளில் 10-ல் ஒரு சொத்தாவது வரையறுக்கப்பட்ட வழிமுறையில் விற்பனை செய்யப் படும் என்றும், இதுபோன்ற நிறு வனங்களை கையகப்படுத்துவது தொடர்பாக நிதி வசதி உள்ள நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. இந்த வரிசையில் சாங்கி இண்டஸ்ட்ரீஸ், இண்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ், கினி பிளமென்ட்ஸ், ஹால்தியா பெட்ரோ கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிறுவன சீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்நிறுவனங்களை கையகப் படுத்த அல்ட்ராடெக், பிரமல் மற்றும் சன் பார்மா நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது. 2015-ம் ஆண்டில் 270 நிறுவனங்கள் கடன் சுமை ரூ. 47,813 கோடியாக உள்ளது.

கடன் சுமையில் சிக்கியுள்ள லான்கோ குழுமம், கடன் சுமையி லிருந்து மீள்வதற்காக சில சொத்து களை விற்கத் திட்டமிட்டுள்ளது. 2015-16-ம் ஆண்டில் உடுப்பி ஆலையை ரூ.6,300 கோடிக்கு விற்பனை செய்தது. அதேபோல ரூ. 25 ஆயிரம் கோடி மின் திட்டங் களிலிருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் கடன் சுமை ரூ. 18 ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது.

அதிக கடன் சுமை உள்ள துறை களான மின்சாரம், கட்டுமானம், உருக்கு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் சொத்து களை விற்க முடிவு செய்துள்ளன. இப்போதைக்கு சொத்துகளை விற்பனை செய்து கடன் சுமையி லிருந்து மீளவும், உரிய சந்தர்ப்பம் வரும்போது மீண்டும் களத்தில் இறங்கவும் பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x