இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எஸ்இஇசட் அனுமதி

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு எஸ்இஇசட் அனுமதி
Updated on
1 min read

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க இன்ஃபோசிஸ் நிறுவனத் துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளா தார மண்டலம் அமைக்க இன்ஃபோ சிஸ் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. பெங்களூருவில் 4 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைய உள்ளது.

மத்திய வர்த்தக துறை செயலர் ரீடா தியோஷியா தலைமையில் ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சக அளவிலான ஆணைய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக் கப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவ னம் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான நிலத்தை வைத் துள்ளது என்பதை சுட்டிக் காட்டி யுள்ள ஆணையம், இதன் காரண மாக முதற்கட்ட அனுமதி வழங்கி யுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 20 திட்டங்களை முடிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அனுமதி வழங்கியுள்ளது.

மாயர் இன்ப்ராஸ்ட்ரக்சர் டெவ லப்மெண்ட் நிறுவனம் ஹரியாணா வில் அமைக்க உள்ள பயோடெக் னாலஜி சிறப்பு பொருளாதார மண்ட லத்துக்கு கால அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் ஐடி- எஸ்இஇசட், வேதாந்தா நிறுவனம் அலுமினிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்து ஒடிசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதும் இந்த அனுமதியில் அடங்கும். சில விதிமுறைகளுக்கு உட்பட்டே இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in